×

திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதி பெண் பலி

 

திருப்போரூர்: திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதியதில் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரமா (48). இவர் நேற்று முன்தினம் மாலை திருப்போரூர் பேருந்து நிலையம் சென்று காய்கறிகள், பழங்கள் வாங்கிக் கொண்டு ேஷர் ஆட்டோவில் வீடு திரும்பினார்.

தனது குடியிருப்பின் எதிர் திசையில் ஆட்டோவில் இருந்து இறங்கிய அவர் சாலையைக் கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அப்போது, பின்னால் வந்த சரக்கு வேன் அவர் மீது மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த ரமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்போரூர் போலீசார், ரமாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்போரூர் அருகே சரக்கு வேன் மோதி பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்